மத்திய அரசின், அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டப்படி, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான, கல்விசார் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டில், 'ஷால ஷித்தி' திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி, கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகும்.இதற்காக, கல்வியாண்டு துவக்கத்தில், ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. அதற்கு பின், எவ்வித பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. செய்வழி கற்பித்தலை ஊக்குவிக்க துவங்கப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடவாரியாக எளிதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, செயல்திட்டம் உருவாக்கி கற்பிக்க, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதற்காக கொண்டு வரப்பட்ட ஷாலஷித்தி திட்டத்தை, ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.'இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், மனப்பாடம் செய்து கற்கும் முறைக்கு முடிவு கட்டலாம். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, செயல்வழியில் கற்பித்தால், மாணவர்கள் படித்தது மறக்க வாய்ப்பிருக்காது' என்றார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது