முதுகலை மருத்துவ மாணவர்கள், இறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 3 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரங்களுடன் செயல்படும் நிர்வாகிகள் குழு (போர்டு ஆப் கவர்னர்ஸ்) இந்த யோசனையை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அமல்படுத்துமாறும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமின்றி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது