அகரம் அறக்கட்டளை நிறுவனம் , அகரம் விதைத் திட்டம் -2021 எனும் திட்டத்தினை , இக்கல்வி ஆண்டில் ( 2020-2021 ) செயல்படுத்தும் வகையில் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் , பெற்றோரை இழந்தவர்கள் , வறுமையில் உழல்பவர்கள் , மாற்றுத் திறனாளிகள் , விளையாட்டு , கலை என கல்வி இணைச் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள் , கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன் பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து , அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்திலுள்ள , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள் , மேற்படி அகரம் விதைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏதுவாக , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் , பள்ளிகளில் கற்றல் / கற்பித்தல் பாதிக்காத வகையில் சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Agaram Foundation Scholarship - Application Form And Instructions - Download here...
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது